Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
ஏறத்தாழ 5,500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நகரத்தார் சமூகம். தொண்ண மண்டலம், பாண்டிய மண்டலம் மட்டுமல்லாமல் பர்மா, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை என கடல் கடந்தும் வாணிபத்தில் கரை கண்டவர்கள் நகரத்தார்.
கடும் உழைப்பு, உயர் பண்பு , இறை பக்தி இவைதான் நகரத்தாரின் தனிச்சிறப்பு. சமயம், சைவ நெறி, தமிழ் மொழியையும் நகரத்தார் சென்ற இடமெல்லாம் வளர்த்தார்கள்.
எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானை நினைத்து உருகி, உருகி பாடி தழைத்தோங்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த 63 நாயன்மார்களில் நம் நகரத்தார் குலத்தைச் சேர்ந்த ஐவரும் அடக்கம் என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி.
சிவனுக்கே அன்னையான காரைக்கால் அம்மையார், இயற்பகை நாயனார், அமர்நீதி நாயனார், மூர்த்தி நாயனார், கலிகம்ப நாயனார் என நம்மவர்கள் ஐவர் பற்றி அழகாக எளிய நடையில் அழகு தமிழில் புதுக்கவிதை போல் இரா. குமார் படைத்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள்.
எந்தப்பக்கம் புரட்டினாலும் விறுவிறுப்பான நடை, நாயன்மார்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யம் ததும்ப விவரித்துள்ளார். அதற்கு அழகு சேர்க்கின்ற ஓவியங்கள், நகரத்தார் இல்லங்களில் இருக்க வேண்டிய அவசியமான நூல் இது.
மு. அ. மு. இராமசாமி