Iruttil Sooriyan

ebook

By Yandamoori Veerendranath

Iruttil Sooriyan

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

இரு நூற்று எட்டு வருடங்களுக்கு முன்னால்...

அப்பொழுது விஞ்ஞானம் இன்னும் முன்னேறாத நாட்களில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த அண்ட வெளியில் சிறிய விநோதமான நிகழ்வு ஒன்று நடந்தேறியது.

அதி நுட்பத்திலும் நுட்பமான அந்த நிகழ்வை மனித ஜாதியால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

கண்டுபிடித்திருந்தால் எதிர்காலத்தை நினைத்து பயந்து நடுங்கியிருக்கும்.

நூற்றி நான்கு வருடங்களுக்குப் பிறகு, அதே நிகழ்ச்சி மறுபடியும் நடந்தது.

தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தால் பெரிய குலுக்கலுடன் எப்படி துள்ளிக் குதிப்பானோ, அதேபோல் சூரியன் அரை வினாடி நேரம் தன்னிடமிருந்த சக்தியெல்லாம் யாரோ உறிஞ்சி எடுத்துக் கொண்டாற்போல் துவண்டான். எரியும் கொதிகலனிலிருந்து நெருப்பை எடுத்துவிட்டால் அது ஒளியை எவ்வாறு இழந்துவிடுமோ அதுபோல் சூரியன் சுயஒளியை இழந்து திரும்பவும் பழைய நிலைக்கு வந்தான்.

சூரியனுக்கு சுமார் கோடி மைல்கள் தூரத்திலிருந்து, விண்வெளிப் படகில் வந்த இரு கிரகாந்தரவாசிகள் தம் நவீன சாதனங்களுடன் அந்தச் சூரிய சக்தியை வஸ்துவாக (மெடீரியலாக) மாற்றித் தம்மோடு எடுத்துச் சென்ற தன் மூலம் நிகழ்ந்த மாற்றம் இது.

மனிதனுக்கு அந்த விஷயம் தெரியாது.

ஐம்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அதே கிரகத்தைச் சேர்ந்தவர்கள் சூரியனிடம் வந்தார்கள். இம் முறை அவர்கள் கொஞ்சம் அதிக நேரம் பரிசோதனைகளைச் செய்தார்கள். சூரிய சக்தியை எரிபொருளாக மாற்றும் அந்த பரிசோதனையில் அவர்கள் வெற்றியடைந்து, அண்டவெளியில் உள்ள தம் கிரகத்தை நோக்கி விண்வெளிக் கப்பலில் போய் விட்டார்கள். பூமியில் விஞ்ஞானம் அப்பொழுது கொஞ்சம் வளர்ந்திருந்தது. சூரியனில் ஏதோ சலனம் ஏற்பட்டதை மனிதன் உணர்ந்து கொண்டான். ஆனால், அந்தச் சலனத்தற்குக் காரணம் சூரிய ஒளியில் ஏதோ மாறுபாடு என்று நினைத்துக் கொண்டானே தவிர அதற்குமேல் அவனால் ஊகிக்க முடியவில்லை. எங்கேயோ வேறு கிரகத்திலிருந்து வந்த புத்தி ஜீவிகள் சூரியனைக் கொள்யைடித்துக் கொண்டு போவார்கள் என்பது...

மனிதனின் கற்பனைக்கு எட்டாத விஷயம்.

Iruttil Sooriyan