Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் என்ற தலைப்பில் நான் சுமார் மூன்று மாதங்களுக்கு என் 'பிளாக்'கில் எழுதிவந்த கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாடு முழுதுமுள்ள பெரும் தலைவர்கள் வந்து துலாபாரம் கொடுப்பதாலும், சபரி மலை ஐயப்பனைத் தரிசிக்க தென் இந்திய மாநிலங்களிலிருந்து கோடிக் கணக்கானோர் வருவதாலும் எவ்வளவு பொக்கிஷம் , புதையல் உள்ளது என்பதை இன்றுவரை தெரிவிக்காத திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலாலும் கேரள கோவில்கள் அடிக்கடி செய்திப் பத்திரிகைகளில் அடிபடுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் வைக்கும் உலகின் மிகப்பெரிய பொங்கல் திருவிழாவும், சோட்டாணிக்கரை அம்மனும், மஹாத்மா காந்தி போராட்டம் நடத்திய வைக்கம் கோவிலும், திருச்சூர் பூரம் விழாவும் , கோவிலில் வசிக்கும் வெஜிட்டேரியன் முதலையும் கேரளத்தைப் புகழ்பெற வைத்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக பரசுராமர் மீட்டு எடுத்து மக்களைக் குடியேற்றிய கடவுளின் பூமி என்பதாலும் பெயர் பெற்றது . இயற்கை அழகோடு கதகளி, மோகினி ஆட்டம், ஜெண்டை மேளம் திருவாதிரைக் கும்மி, மஹாபலியை வரவேற்கும் ஓணம் பண்டிகை ஆகியன எல்லாம் மக்களின் அன்றாட வாழ்வை இறைவனுடன் இணைக்கும் புண்ய பூமி கேரளம்.
ராமனின் சகோதரர்கள் எல்லோருக்கும் கோவில்! பாண்டவர்கள் அனைவரும் எழுப்பிய கோவில்கள்!! என்று படிக்கும் போது 5000 ஆண்டு வரலாற்றையும் நமக்கு அளிக்கும் கோவில்களையும் கட்டாயம் நாம் பார்க்க வேண்டும் என்ற துடிப்பும் எழுகிறது. நேரில் அத்தனை கோவில்களுக்கும் செல்ல இயலாவிட்டாலும் யூ ட்யூப் மூலம் பாம்புக் கோவில்களையும் ,பகவதி கோவில்களையும் ஐயப்பன் கோவில்களையும் தரிசிக்கலாம். . பாடல்பெற்ற வைணவ ஸ்தலங்களும் சிவன் ஸ்தலங்களும் இருப்பது இதை புண்ய பூமி என்று ஆழ்வார்களும் நாயன்மார்களும் அங்கீகரித்து இருப்பது விளங்கும். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை 600 மைல்கள் பயணம் செய்து அனைத்து தலங்களையும் தரிசிப்போம்! வாருங்கள்!!