Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
![LibbyDevices.png](https://images.contentstack.io/v3/assets/blt3d151d94546d0edd/blt96637953bca8f11b/642dbad30afb1c108e793645/LibbyDevices.png)
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கற்பனைகள் ஆசைகள் இருக்கும். ஆனால் அது மற்றவர்களை பாதிக்காமல் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனிதாபிமானம் என்பதை விட்டு விடக் கூடாது. இதைத்தான் சந்தன முல்லையின் கதையில் முல்லை செயல்படுத்துகிறாள்.
திருமணத்தன்று ஓடிப்போன சங்கர் இன்னொரு பெண்ணை விரும்பி மணக்கிறான். முல்லை அதைப்பற்றி மனம் வருந்தினாலும் அடுத்து தன் படிப்பையும் தகுதியையும் உயர்த்திக் கொள்ள முயற்சி செய்கிறாள். அப்பொழுது அவளுக்குப் பழக்கம் ஆகிறான் வாசு. முல்லையின் அழகு திறமை அவள் அப்பாவிடம் உள்ள காசு இவற்றைப் பார்த்து அவன் அவளை விரும்புகிறான். ஆனால் அவன் ஒரு கேள்வி கேட்கிறான். உன் மனதில் இன்னமும் சங்கர் இருக்கிறானா என்று.
அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் விலகிப் போய்விட, சங்கர் தன் தவறை உணர்ந்து தன் அப்பாவிடமே திரும்பி வருகிறான். அப்பொழுது முல்லை சொல்கிறாள் "உன் மனசுல இன்னொருவன் இருக்கிறானா என்று கேட்பவனை விட, தான் செய்தது தவறு என்று உணர்ந்தவர் மிக நல்லவராக இருப்பார். எனவே ஷங்கரை திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கை திருப்தியாக இருக்கும்" என்று முடிவெடுக்கிறாள் சந்தன முல்லை எப்பொழுதும் நறுமணம் வீசிக் கொண்டுதான் இருக்கும். இதை இந்த நாவல் உணர்த்துகிறது.