Ninaivu Kumizhigal

ebook

By Kudanthai Anitha

cover image of Ninaivu Kumizhigal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

காதல் தியானம் கவிதை என்பது ஒரு மாயசக்தி. அது எல்லோருக்கும் எளிதாக வசப்படுவதில்லை. அதனால்தான் கவிதை எழுதுகிற பலரையும் அது எளிதாக ஏமாற்றிவிடுகிறது. ஆனால் கவிஞர் குடந்தை அனிதாவிடம் அந்த மாயசக்தி மகிழ்வோடு வசப்பட்டிருக்கிறது. வசப்பட்டதை வைத்துக்கொண்டு அனைவரையும் அவர் வசப்படுத்துகிறார். எழுதுவதெல்லாம் எழுத்தல்ல; இதயத்தை ஒரு நொடியாவது இழுத்து நிறுத்துவதே எழுத்து. அத்தகைய வலிமையான எழுத்தை அனிதாவிடம் பார்க்க முடிகிறது. எழுதுவதை வெறும் பொழுதுபோக்காக கருதாமல், தன்னை ஆட்டிவைக்கும் சிந்தனைகளைக் கவிதைகளாக்குகிறார் அனிதா. அவை நம்மை ஆட்டிவைக்கின்றன.

வாழ்வின் அனைத்தையும் ரசிக்கத் தெரிந்த நம் கவிஞருக்கு மலரும் ஒன்றுதான், முள்ளும் ஒன்றுதான். இருளும் ஒன்றுதான் ஒளியும் ஒன்றுதான். இது ஒருவகை தியான நிலை. பெண்ணியமும் காதலியமும் கைகோத்து நடக்கும் இவருடைய கவிதைகளுக்கு, இலக்கியம் மலர்ப்பாதை விரிக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த நூல், இதயங்களை வேட்டையாட வரும் ஒரு இதய இலக்கியம். இவருடைய கவிதைகள் ஆழமானவை. அதனாலேயே இவரது கவியுலகம் உயரமாக இருக்கிறது.

Ninaivu Kumizhigal