Pillaitamil - Panmugapaarvai

ebook

By Meenakshi Balganesh

cover image of Pillaitamil - Panmugapaarvai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் மொழிக்கே உரித்தான ஒரு அருமையான சிற்றிலக்கியம் ஆகும். கடவுளர்கள், அரசர்கள் அல்லது பெருங்குடி மக்கள் ஆகியோரைக் குழந்தையாகக் கொண்டு அவர்கள் வளர்ச்சியைப் பத்துப் பருவங்களில் பாடுவர். இவற்றிலுள்ள சொல் நயம், உவமை, அணிகள், வண்ணம், சந்தம் முதலியனவற்றையும் பாடல்களில் அவ்வத் தெய்வங்களின் பெருமைகளையும், அவர்கள் சம்பந்தப்பட்ட புராண இதிகாசச் செய்திகளையும் தொன்மங்களையும் அவை தமிழின் இலக்கிய நயமும், இனிமையும் வெளிப்பட உரைக்கப்பட்டுள்ளதையும் இந்நூல் ஆய்வு செய்துள்ளது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியை, அக்குழந்தை தெய்வக் குழவியே ஆயினும், பிள்ளைத்தமிழ் நூல்கள் நுட்பமாக அறிவியல் முறையில் ஆராய்ந்து பதிவு செய்துள்ளன. மகவின் வளர்ச்சியானது அறிவு வளர்ச்சியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோர் பெருமையுடன் கண்டு களித்துப் பாடும் விதமாக அமைவதனை ஆய்ந்துள்ளது. மேலும், பாட்டுடைத் தலைவர்கள் மட்டுமின்றி, மற்ற கடவுளர்கள் பற்றிய புராணக் கதைகளும், தொன்மங்களும் இந்நூல்களின் செய்யுளிடை விரவியும் கலந்தும் நின்று, தற்காலத்து நவீன உரைநடை நூல்களைப் படிப்பது போன்ற இன்பத்தை நுகர்வோருக்கு வழங்குவதை நோக்கலாம். தெய்வங்களைச் சிறு மக்களாக்கிப் பாடிப் பரவினும் பெரும் சைவ சித்தாந்தத் தத்துவக் கருத்துக்கள் இப்பாடல்களின் ஊடே கலந்து பெருகி நிறைந்து ஒப்பரிய தெய்வ அனுபவத்தைப் படிப்போருக்கு வழங்குவதை உணரலாம்.

இந்த ஆய்வுநூல் 1) பல பெண்பால் மற்றும் ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இருந்து பலவிதமான இலக்கிய நயங்களைத் தொகுத்தும், ஒப்பிட்டும் உள்ளது; 2) உளவியல், அறிவியல் நோக்கில் இருபால் குழந்தைகளின் வளர்ச்சியை ஆராய்கிறது. 3) பெற்றோரின் நோக்கில் குழந்தையின் வளர்ச்சியை (உடல், உள்ளம் இரண்டின்) ஆராய்ந்து ஒப்பிடுகிறது; 4) சமயக் கருத்துக்களை நுட்பமாக விளக்கியமை பற்றி நோக்கியுள்ளது; 5) பிரபஞ்ச இயக்கத்தை தத்துவ அறிவியல் முறைகளில் ஆய்ந்துள்ளது; 6) 'தீந்தமிழின் இலக்கிய நயங்களை இந்நூல்களை இயற்றிய புலவர் பெருமக்கள் விவரித்துள்ளதைக் கண்டு போற்றுவது' எனும் தலைப்புகளில் அமைந்துள்ளது.

Pillaitamil - Panmugapaarvai