Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
இந்திய மண்ணில் தோன்றிய மஹரிசிகள் கடவுளை அடிப்படையாகக் கொண்டு பல விஞ்ஞானத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், பொதுமக்களுக்குச் சென்றடையவேண்டும், கல்வியாக்க வேண்டும் என்ற பொது நோக்க கருத்துடன் எழுதி வெளியிட்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசு அலுவலர்களுக்காக அவர்களின் சட்ட விதிமுறைகள் சம்பந்தப்பட்ட "அரசுப் பணியாளர்களின்" நண்பன் போன்ற 25 புத்தகங்கள் வரை எழுதிய எழுத்தனுபவமும், 1970களில் பள்ளி கல்லூரி காலத்தில் கோவிலின் அமைப்பு விநாயரிடம் போடப்படும் தோப்புக்கரணம் ஆகியன முறைகளை உடற்பயிற்சியுடன் ஒப்பிட்டு கோவிலும், கோவிலில் கடவுளை வணங்குவதும் உடற்பயிற்சி விஞ்ஞானத்தின் அடிப்படைதான் என்ற எனக்குள் தோன்றிய கருத்தும் தான் இந்தப்புத்தகம் வளர அடிப்படைக்காரணம்.
இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் பிற்காலத்தில், நான் தெரிந்துண்ட கடவுள் கோவில் புராணம் ஆகியனவற்றில் இருக்கும் விஞ்ஞானத்தை புரிந்துகொள்ள காரணமானது. இந்திய ஞானிகள், [1] ஏராளமான கடவுள்களைக் குறிப்பிட்டதன் காரணமும்; [2] கணவன் மனைவி குடும்பம் குழந்தை என்று சொன்னதன் பின்னனியில் உள்ள விஞ்ஞானமும் [3] சிவனுக்கு பார்வதியும் விஷ்ணுவுக்கு லக்ஷ்மியையும் ப்ரம்மாவுக்கு சரஸ்வதியையும் மனைவியாக ஜோடி சேர்த்ததில் உள்ள விஞ்ஞானமும் இதுபோன்ற பல முக்கிய விஞ்ஞானத் தகவல்களையும் விவரித்திருக்கிறேன். இந்தப்புத்தகத்தில் சிவன், ஆதி பராசக்தி, விநாயகர், சுப்பிரமணியன் என்று சொல்லியிருந்தாலும், இதில் மதம் சம்பந்தபட்டுத்தாமல் எழுத நினைத்ததன் விளைவே இந்தப்புத்தகம். இந்திய ஞானிகள் தன் ஞானத்தால் அறிந்த இயற்கையின் விஞ்ஞானத்தை, இயற்கையின் விதிகளை, மனித தர்மங்களை வேதம், புராணம், கோவில், ஆகமம், கடவுள் என்பதன் வாயிலாக விளக்கியிருக்கின்றனர் என்ற அடிப்படைக் கருத்தை வலியுருத்தியிருக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் ஞானம் என்பதன் வலிமையையும் புரிந்துகொள்ளவும் முடியும். இதே அடிப்படையில் இன்னமும் சில புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன், அவற்றில் [1] வர்ணம் அதாவது ப்ராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்பதன் அடிப்படைகளை உதாரணங்களுடன் விவரித்தும்; [2] பஞ்சபூதமும் ஆரோக்யமும் போன்ற தலைப்புகளில் சிறிய புத்தகங்கள் வெளிவர இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது – "மனதில் தோன்றும் பல எண்ணங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன்படி செயல்பட ஆரம்பித்தால் எண்ணத்தின் இலக்கை அடைய பாதை வகுக்கப்படும், என்று" - இது இந்தப்புத்தகம் எழுதியதில், நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த சத்தியம்.