
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
பாராளுமன்றவாதி, பத்திரிகை ஆசிரியர், பக்குவப்பட்ட அரசியல்வாதி, விடாப்பிடியான கொள்கையாளர், பொறுப்புள்ள பிரதமமந்திரி, மக்கள் பிரியத்துக்குரியவர், சக்திவாய்ந்த பேச்சாளர் என்ற அடையாளங்களைத் தாண்டி மிக மென்மையான கவித்துவமே வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்தவர் வாஜ்பாய்.
பாருங்களேன்.....
20
வா மனதின் கவலையை நீக்குவோம்
யமுனை நதிக்கரை.
மணற்பாங்கானதொரு மேடு.
கம்பம் தாங்கிய கோரைப்புற்கூரை.
சாணம் மெழுகிய முற்றம்.
துளசிச் செடி.
மணியின் ஓசை.
தாயின் குரலில் ஈரடியிலும் நாலடியிலும் ராமாயணம்.
பாடிப்பாடிக் கரைந்து போகிறாளே_
வா மனதின் கவலையை நீக்குவோம்.
விரித்து வைத்த சாய்வு நாற்காலி.
வாசலில் கட்டிலும் பாயும்.
பார்ப்பவனுக்கு உள்ளே போவதோ வேண்டாமோ என்ற தயக்கம்.
மூக்கின் மேல் கண்ணாடி.
திறந்த புத்தகம்.
தனக்குத்தானே பேசிக் கொள்கிறhரே.
வா மனதின் கவலையை நீக்குவோம்.
கலைமகளின் சாதக பீடத்தில்
திருமகளுக்குச் சம்பந்தமில்லைதான்.
மண்ணே நெற்றிக்குச் சந்தனமென்று
தரித்திரம் சங்கல்பித்துவிட்டதே.
புதிய வருடத்தின் பிறப்பிலாவது
நிமிர்ந்து சுதாரித்துப் புத்துணர்ச்சியோடு
சற்றே புதிதாய் மாறுவோமே.
வா மனதின் கவலையை நீக்குவோம்.