
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
ஜஸ்டிஸ் ஜெகதீசனின் வாழ்க்கையிலே இறைவனின் திருவிளையாடலைக் காணலாம். அவர் மருத்துவராக வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டார். திரு. ஜெகதீசனோ, என்ஜினியராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், இறுதியில் இறைவன் அவருக்குக் கொடுத்தது சட்டக் கல்லூரி படிப்புதான். சட்டக் கல்லூரி படிப்பில் வெற்றி பெற்று வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தபிறகு தன் வழக்கறிஞர் தொழிலை பிரபல வழக்கறிஞரான தன் தந்தையுடன் இணைந்து சேலத்திலேயே ஆரம்பிக்கலாம் என்ற முடிவு எடுத்த பொழுது அவருடைய தந்தையின் நண்பர் ஜஸ்டிஸ் கே. வீராசாமி (பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர்) சேலம் வந்தபொழுது, திரு. ஜெகதீசனைப் பார்த்து, "உன்னுடைய வழக்கறிஞர் தொழிலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பிக்க வேண்டும்" என்று அன்புக்கட்டளை விடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். அவர் சென்னை வந்தபிறகு பிரபல அரசு வழக்கறிஞர் (பின்னால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு தலைமை நீதிபதியாகவும், அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றிய) திரு. ஜஸ்டிஸ் வி. ராமசாமி அவர்களுடைய அலுவலகத்தில் இளம் வழக்கறிஞராக சேர்க்கப்பட்டார். சில வருடங்கள் அந்த அலுவலகத்திலும், அதன்பின் இந்தியாவில் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் அட்டார்னி ஜெனரல் திரு. கே. பராசரன் அவர்கள் அலுவலகத்திலும் பயிற்சி பெற்று சட்ட நுணுக்கங்களையும், நீதிமன்ற விதிமுறைகளையும் சிறப்பாகக் கற்றுக்கொண்டு அதன்பின் தனியாக வழக்கறிஞர் தொழிலில் இறங்கி, விரைவில் படிப்படியாக முன்னேற்றம் கண்டார்.
இந்த நூல் அனைவருக்கும் - முக்கியமாக வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் - மிக்க பயன்தரும் நூலாக உள்ளது. நூலை வாசிப்பவர்கள் அதை நன்கு உணர்வார்கள்.