Natrinai

ebook

By Azhwargal Aaivu Maiyam

cover image of Natrinai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது கடைச்சங்கம். அந்த கடைச்சங்க காலத்தில் மிகச் சிறந்து விளங்கிய நூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்.

இந்த நூல்கள் தமிழ் மக்களின் நெறிசார்ந்த வாழ்வியல் தத்துவங்களையும், வரலாற்றுச் செய்தி களையும் செழுமையான அறிவையும் கலை உணர் வையும், எடுத்துரைக்கின்றது.

மேலும், அத்தகைய பெருமை மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களின் வழியில் வந்தவர்கள் நாம் என்று நினைக்கும்போது நமக்கும் பெருமை உண்டாகிறது.

அகப்பொருட்களை விளக்கக் கூடிய எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகத் திகழ்வது நற்றிணையாகும். அகப்பொருள் சார்ந்த நெடுந்தொகை, நற்றிணை, குறுந்தொகை என்ற மூன்றும் தொகை நூல்களாகும்.

இவைகள் அனைத்தும் செய்யுளின் வளத்தையும் அடிகளின் அளவையும் கருத்தில் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல்கள் ஒவ்வொன்றும் 400 செய்யுட்களைக் கொண்டுள்ளது.

தொகை நூல்கள் ஒவ்வொன்றையும் தொகுத்தவர் இவர் என்றும் தொகுக்கும் பணிக்கு நிதியுதவி செய்தவர் இவர் என்றும் குறிப்புகள் காணப்படும்.

இந்த மன்னன் துணையுடன் இந்த சான்றோர் இந்த நூலைத் தொகுத்தார் என்று அந்த நூல்களில் இயல்பாக காணப்படும். அந்த வரிசையில் நற்றிணையைத் தொகுப்பித்தவர் பாண்டியன் பான்னாடு தந்தான் மாறன் வழுதி என்று குறிப்பு காணப்படுகிறது.

இதில் பன்னாடு தந்தான் என்று கூறுவது அவன் வீரத்தை குறிப்பிடும் சிறப்புப் பெயராகும். இவனுடைய உதவிகளைப் பற்றி நற்றிணை, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது.

குறிப்பாக நற்றிணையில் 97, 301 ஆகிய பாடல்களில் பாடப்படுகிறது. இவை அந்த மன்னனுடைய தமிழ் புலமையையும் பேராற்றலையும் பறைசாற்றுகின்றது.

இருப்பினும் இந்த நூலைத் தொகுத்தவர் யார் என்ற குறிப்புகளும் ஒன்றும் காணப்படவில்லை. சிறப்பாக தொகுத்துள்ளதைப் பார்க்கும்போது இவர் அகப்பொருள் செய்யுட்களை படைப்பதில் பெரும் புலவராக இருந்திருக்க வேண்டும் என்று கருதலாம்.

400 செய்யுட்களைக் கொண்ட நற்றிணையில் ஒன்பது அடிகளில் சிறிய செய்யுட்களும், 12 அடிகளில் சற்று நீளமான செய்யுட்களையும் கொண்டு இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு 132, பாலைக்கு 106, நெய்தலுக்கு 101, மருதத்துக்கு 32, முல்லைக்கு 29 என்ற எண்ணிக்கையில் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலை தொகுத்தவரின் மதிப்பீட்டின்படி அவர் செறிவு மிக்கதாக நினைத்த செய்யுட்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு கொள்ள முடியும்.

எட்டுத்தொகை நூல்களைப் பற்றி வரிசையாக கூறக்கூடிய பழம்பாடல் ஒன்று உள்ளது.

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை"

நற்றிணை என்பதில் திணை என்றால் ஒழுக்கம் என்று அர்த்தம். நல்ல திணை என்றும் நல் ஒழுக்கம் என்றும் இதனைக் கூறலாம். திணை ஒழுக்கங்களில் நல்ல மரபும், பண்பும் உள்ள செய்யுட்களைத் தொகுத்து நற்றிணை ஆக்கப்பட்டுள்ளது என்று கருதலாம். இந்த நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அறிகின்றோம்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சான் றோர்கள் பலர் இந்த செய்யுட்களைத் தங்களுடைய உரைகளில் பல இடங்களில் எடுத்துக் காட்டியுள்ளனர்.

தொடர்ந்து தமிழ் சான்றோர்களின் தமிழ்ப் பணியால் தமிழ் அறிந்தவர்கள் எல்லாம் நற்றிணையைப் பற்றி பேசவும், ஆராயவும், படித்து மகிழவும் பேச்சிலும் எழுத்திலும் எடுத்துக் காட்டவும் கருத்து விருந்து அளிக்கவும் நற்றிணை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் பரவலாயிற்று.

Natrinai