Nallathor Veenai Seithen

ebook

By Varalotti Rengasamy

cover image of Nallathor Veenai Seithen

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

சுயசரிதைகள் இரண்டு வகை – ஒன்று, உடன் வாழ்பவர்களைக் காயப்படுத்தும்; இரண்டு, அப்படிக் காயப்படுத்தக்கூடாதே என்பதற்காகப் பொய் சொல்லும்.

எப்படி வாழ்வது என்று துடித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு மாதிரி வரைபடத்தையாவது தரலாமே என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்த மூன்றாவது வகை.. இதில் பொய்யும் இல்லை. காயப்படுத்துதலும் இல்லை.

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றது, ஒரு பெரிய சமுதாய மாற்றத்திற்கு வித்திட்டது, புற்று நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்தது, ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தைத் தொடங்கியது - இவை போன்ற பிரம்மாண்டங்கள் எதுவும் என் வாழ்க்கையிலும் இல்லை; இந்த நூலிலும் இல்லை. ஒரு நூல் வெளியீட்டு விழாவைத் தடுத்து நிறுத்தியது, , நான் செய்த பெரிய தவறைப் பெரிய மனதுடன் மன்னித்த என் வாடிக்கையாளர், தேர்வில் தன் மகன் தவறிவிட்டான் என்று தெரிந்தும் அவனை அரவணைத்து ஆறுதல் சொன்ன தந்தை, நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு புத்தக வெளியீட்டு விழா, பத்து ரூபாய் கேட்டதற்காக மாதச் சம்பளத்தையே தன் மகனிடம் கொடுத்த ஒரு மத்தியதர வர்க்க தந்தையின் தொலைநோக்குப் பார்வை–இவை போன்ற அன்பின் பிரம்மாண்டங்கள் இதில் இறைந்து கிடக்கின்றன.

வீணையைச் செய்து முடித்துவிட்டேன். என்னிடம் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டேன். வைத்துக்கொண்டு வஞ்சனை செய்யவில்லை. நல்லதோர் வீணை செய்தேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்றாலும் இந்த வீணையை வாசித்துப் பார்த்து நீங்கள் சொல்லும் தீர்ப்பே முடிவானது.

Nallathor Veenai Seithen