ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம்--விளக்கவுரை)

ebook

By Dr. Sudha Seshayyan

cover image of ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம்--விளக்கவுரை)

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

மகான்களின் சேர்க்கையில், மறைகள், புராணங்கள், பரமனின் பல லீலைகள், அவதார சிறப்புகள், மந்திரங்களின் உட்கருத்துகள் போன்றவை அறியப்படும். இவைகள், வேதங்கள், இதிஹாஸ புராணங்கள், தந்த்ரங்கள், ஆகமங்கள் போன்ற பல ஆன்மீக பொக்கிஷங்களில் சிதறிக் கிடக்கிறது. அம்முத்துகளைச் சேர்த்து அழகான மாலையாகத் தொடுத்து இறைவனின் வடிவத்தில் சாற்றி அந்த அழகை மனக்கண்ணால் கண்டு களித்து சுவைத்து ரசித்து மனதின் மலங்களை அகற்றி பசுபதியின் ஸ்வரூபத்தை அடையலாகும்.
இங்ஙனம் காணப்படும் பல சிறந்த ரத்னஹாரங்களில் ரஹஸ்ய நாம ஸாஹஸ்ரம் என்று கூறப்படும் லலிதா ஸஹஸ்ரநாமம் மிகச் சிறந்ததாகும். இது பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் ஹயக்ரீவருக்கும், அகத்திய மாமுனிவருக்கும் நடைபெற்ற ஸம்வாதரூபமாக அமைந்துள்ளது. இதில் மந்த்ர காண்டம், ந்யாஸ காண்டம், பூஜா காண்டம், புரஸ்சரண காண்டம், ரஹஸ்ய காண்டம் போன்ற பல காண்டங்கள் அமைந்துள்ளது. பற்பல விஷயங்கள் இதில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆன்மீகமான விஷயங்கள் மட்டுமன்றி மனித நேயம் நீதி சாஸ்திரம், இறையாண்மை, வாழ்க்கை நெறி, சுற்றுப்புற சூழல் பராமரிப்பு, ராஜநீதி போன்ற பல விஷயங்களும் தெளிவாகிறது. மனிதனின் முழு வளர்ச்சிக்கு மன நிம்மதி, தெளிவு, ஒருமுனைப்பாடு மிகவும் அவசியம். இவைகளை சிறப்பான முறையில் அளிக்கவல்லதாக அமைந்துள்ளது இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்.

ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம்--விளக்கவுரை)