பார்த்திபன் கனவு

ebook

By Kalki

cover image of பார்த்திபன் கனவு

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

புதினங்களில் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சரித்திர நூல்களுக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. இத்தகைய வரலாற்று பெருங்கதைகளை எழுதுபவர்களுக்கு ஆழ்ந்த சரித்திர ஞானம், கற்பனைத்திறன், சொல்வளம் ஆகியவை இருப்பது அவசியம். அமரர் கல்கி இத்தகைய புதினங்களை படைப்பதில் வல்லவர். பார்த்திபன் கனவு அவரது ஒப்பற்ற படைப்பாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறே சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நெடுங்கதைகளும் அவரது இணையற்ற திறமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. அவரின் படைப்புகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. அதனால்தான் மீண்டும் மீண்டும் பத்திரிகைகளில் தொடர்களாகவும், பதிப்பகங்களில் புத்தகங்களாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில் 'பார்த்திபன் கனவு' என்ற இப்புத்தகமும் ஒப்பற்ற ஒரு வரலாற்று காவியம். பார்த்திப மஹாராஜா தனது சோழவள நாடு பிற்காலத்தில் எப்படியிருக்க வேண்டும் என்று இரவு பகலாக கனவு கண்டு அதை ஒரு அற்புத சித்திரமாக தீட்டி வைத்திருந்ததைப் போல நமது ஆசிரியர் அமரர் கல்கி அவர்களும் இக்காவியத்தை உயிரோவிய வரிகளில் தீட்டியிருக்கிறார். இக்காவியத்தில் விக்ரமன்-குந்தவியின் காதல், மாமல்லன் நரசிம்ம பல்லவர்-குந்தவியின் தந்தை மகள் பாசம், பொன்னன்-வள்ளியின் ராஜ பக்தி, சிறுத்தொண்ட நாயனாரின் வீரம், பார்த்திபனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற நரசிம்ம பல்லவர் மேற்கொண்ட முயற்சிகள் போன்ற பல விஷயங்கள் விறுவிறுப்பான கதையமைப்புடன் அமைந்துள்ளது. இன்றளவும் காஞ்சி மாநகர வீதிகளில் நடக்கும்போது, 'குந்தவி தேவியார் இங்குதானே பல்லக்கில் பவனி வந்தார், மன்னரின் குதிரைகள் இந்த சாலைகளில்தானே வேகவேகமாக ஓடியது, இங்கு தானே கொல்லரின் பட்டறைகளில் ஓயாமல் ஆயுதங்கள் பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருந்தன என்றெல்லாம் அக்கால நினைவுகள் அலைமோதும் வண்ணம் மனதிற்குள் பதிந்த கதாபாத்திரங்களும் கதையம்சமும் அக்காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதாக உள்ளது.

பார்த்திபன் கனவு