Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
பல்லவியும் சதீஷும் பதிவுத் திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். திங்கள் கிழமை தான் அலுவலகம் திறக்கும் எனவே இடைப்பட்ட ஒரு நாளில் ஹோட்டல் அறையில் தங்க நேரிடுகிறது.அதற்குள் பல்லவியின் தந்தை தன் மகளின் புகைப் படத்துடன் மகளைக் காணவில்லை என்று விளம்பரம் தர... இருவரும் அடைக்கலம் தேடி அங்கிருந்து கிளம்புகிறார்கள் .ஒரு நாள் ஒரே ஒரு நாளில் நடக்கும் விபரீதங்கள்...சதீஷின் பெரியம்மா மகன் உமேஷ் உதவிக்கு வருகிறான்.அவனுடன் பல்லவியை அனுப்பிய சதீஷ் நிம்மதிப் மூச்சு விட மோப்பம் பிடித்த காவல் துறை அவனை அரஸ்ட் செய்கிறது. பல்லவி பற்றிய தகவல் தர சதீஷ் மறுக்க சித்திரவதை தொடருகிறது.இங்கு உமேஷின் தாய் தங்கம் பல்லவியை அன்புடன் வரவேற்று ஆதரவு தந்துஅன்பையும் தருகிறாள். தங்கத்தின் பாசத்தில் மயங்கிய பல்லவி அவளுடன் பேச பல உண்மைகள் வெளிப்படுகின்றன . உமேஷ் சிதம்பரத்தை (சதீஷின் தந்தை) பழிவாங்கத் துடிப்பதும் அதனால் தான் இவளுக்கு அடைக்கலம் தந்ததும் தெரிகிறது.சிதம்பரத்திற்கும் உமேஷுக்கும் என்ன உறவு?தங்கம் யார்? அவள் கடந்த காலம் என்ன?சதீஷ் விடுவிக்கப் பட்டானா?சதீஷ் பல்லவி திருமணம் நடந்ததா?பழி வாங்கும் படலம் என்னவானது? இத்தனை கேள்விகளுக்கும் நாவலின் இறுதியில் பதில் கிடைக்கும். சுவாரசியமான திருப்பங்களுடன் பயணிக்கும் நாவல். பயணம் சுகமே...