Mandhira Viral

ebook

By Indira Soundarajan

cover image of Mandhira Viral

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

ஏட்டில் எழுத்தாணியால் எழுதிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் பேனா பேப்பர் என்று விஞ்ஞானம் வளர்ந்தது. நாம் நினைப்பதை எழுத நினைப்பதைத் தான் அந்தப் பேனா எழுதும் என்பதுதான் நடைமுறை. ஆனால் இந்திரா சௌந்தர்ராஜன் கரத்திலிருக்கும் பேனா அதற்கு விதிவிலக்கு. சாதாரண பேனா அல்ல. மந்திரப் பேனா என்றுதான் சொல்ல வேண்டும். பேனாவைப் பிடித்து எழுதும் விரல்களும் சாதாரண விரல்கள் அல்ல. மந்திர விரல்கள். அதனால்தான் அவர் எழுதும் நாவல்களும் மாய மந்திரங்கள் நிறைந்து படிக்கும் வாசகர்களை வேறு ஒரு உலக்த்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். அந்த வகையில் இந்த நூல் மந்திர விரலும் சிறந்த நாவலாக விளங்கும் வதில் ஆச்சரியமில்லை.

ஒவ்வொரு நாளிலும் பொழுதிலும் ஆயிரமாயிரம் வினாடிக் கழிவிலும் நட்சத்திர திதி கர்மஹோரைகள் நாழிகைகள் தங்களுக்கே உரிய சக்தியோடு அந்த பொழுதில் பயணித்த வண்ணமுள்ள இந்த சர்வாமிர்த நாழிகை மிகச் சரியாக 12 நொடிகள்தான். இந்த 12 நொடிப் பொழுதை ஒருவன் கண்டறிந்து அவ்வேளையில் தொழில் தொடங்குவானாயின் அவன் குபேர விலாசம் அடைவது நிச்சயம். அதே போலத்தான் அர்த்த ஜாமத்தில் வரும் ராஜஸ வினாடி. இதில் நிறை நேர் நட்சத்திர ஆணும் பெண்ணும் புணர்ந்து பெருக்கிய சுக்கிலம் உயிர்ப்பினைவு கொண்டு கருப்பையை அடைய கருத்தரித்த அந்த பெண்ணே தேவாம்சங்களுக்கு உள்ளாவாள். அந்த குழந்தை பாப ராசிச் சக்கரங்களையே பந்தாக உதைத்து விளையாடும். அதன் விரல்கள் மந்திர பந்தாக உதைத்து விளையாடும். அதன் விரல்கள் மந்திர விரல்கள். அது பட்டால் இறந்து பட்டதும் உயிர் பெறும் என்ற அமிர்த கடிகையின் வரிகள்தான் இந்த நாவலின் கரு.

நெசவாளி மூர்த்திக்கும், மனநிலை சரியில்லாத ராணிக்கும் அத்தகைய குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை கடத்திச் செல்ல முயலும் மனிதக் கூட்டம் எனக் கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

இந்நாவலில் சற்றே வித்தியாசப்பட்டு அமெரிக்க மண்ணில் வாழும் நான்கு கதை மாந்தர்களையும் தென்காசியில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் மேற்படிப்பும், பணியும் மேற்கொண்ட இளைஞனையும் மையமாக வைத்து மற்ற கதாபாத்திரங்களை உலவவிட்டு இருக்கிறார்.

Mandhira Viral