Vallinayagiyin Kobam

ebook

By C. N. Annadurai

cover image of Vallinayagiyin Kobam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

கடவுள் இருக்கிறார்!

கடவுளுக்குத் தெரியும்!

கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்!

கடவுளுக்குப் பொதுவாக நட!

கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்!

கடவுள் கைவிடமாட்டார்!

கடவுளின்மீது பாரத்தைப் போடு!

***

கடவுளைக் கண்டவர் இவர்-பெரிய ஞானி-மூடுடா வாயை!

கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?

கடவுளா கொடுத்தார் -கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்!

கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா-காரியம் நடந்துவிடும்-மூடா, உன் கடமையைச் சரியாகச் செய்யாமே, கடவுளைக் கூப்பிடறயா, எதற்கு எடுத்தாலும்!

கடவுள் காப்பாற்றுவார் போடா-ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்-போ, போ-கடவுளைக் கேளுதாச்சொல்லி-தருவார்-போ.

கடவுள் எப்படித்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று துளியாவது பயந்தா நடக்கிறான், அந்தப் பாவி.

கடவுள்கூடத்தான் பயப்படுகிறார், இப்படிப்பட்டவர்களிடம்.

கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை-கண்ணைக் குருடாக்கிவிட்டாரா-கைகாலை ஒடித்துவிட்டாரா-கொழுத்துத்தான் கிடக்கிறான்.

கடவுள் கொடுத்தார்னுதான் 'ஜம்பம்' பேசுகிறான், அந்தக் கள்ளன்.

கடவுள், அவன் பக்கமா இருப்பது-அடுக்குமா?

கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?

***

கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?

கடவுள் இருந்தால், இப்படியா செய்வார்?

கடவுள், கடவுள் என்று நாம்தான் கதறுகிறோம்-காரியவாதி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துதான் வேலை செய்கிறான்-கடைசியிலே அவன் பக்கம்தான் கடவுள் சேர்ந்துகொள்கிறார்.

***

Vallinayagiyin Kobam